காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலையம் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, காணியிருப்பு புனித பாத்திமா அன்னை ஆலயம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு எம்.பிலோமின்தாஸ் முன்னிலையில் கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது தொடர்ந்து அரியலூர் பங்கு குரு தோமினிக் சாவியோ மற்றும் குடந்தை திரு இருதய மருத்துவமனை இயக்குனர் தேவதாஸ். ஆகியோர் முன்னிலையில் நவநாள் கூட்டுபாடல் திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நோய் நொடியின்றி சகல நன்மைகளும் கிடைக்க புனித பாத்திமா அன்னையை பிரார்த்தனை செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து புனித பாத்திமா அன்னை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பேண்ட் வாத்திய இன்னிசையுடனும், வான வேடிக்கையுடன் மின் அலங்கார தேரில் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை காணியிருப்பு அருட்பணியாளர் எம். ஜோசப் அடிகளார் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.