BREAKING NEWS

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார்கள்

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார்கள்

இதில் ஊராட்சி மன்ற தலைவர் திரு பிச்சை அவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடத்தில் குறை நிறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டு தெரிந்து கொண்டார்

உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஊராட்சி தலைவருக்கு உத்தரவிட்டார்

மேலும் தீர்மானங்கள் அனைத்தையும் வாசிக்கப்பட்டு ஊர் பொதுமக்களிடத்தில் தெரிவித்து அனைவரும் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டனர்

பின்பு ஊராட்சி மன்ற தலைவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்தார் கூட்டம் நிறைவுபெற்றது.
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் பொதுவிருந்து மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றியக்குழு தலைவர் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா. திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுவிருந்து மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர் , ஆகியோர் கலந்து கொண்டு
அம்பாளுக்கு காணிக்கையாக வரபெற்ற புடவைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா, முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விக்னேஷ் மற்றும் பணியாளர்கள் , செய்து இருந்தன

Share this…

CATEGORIES
TAGS