குடியாத்தம் அருகே காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு மற்றும் மாதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருதாகவும் மேலும் குடிநீர் இன்றி தவித்து அவதிக்குள்ளாகி பெரும் சிரமத்தை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என அனைவருக்கும் பல்வேறு புகார்கள் தந்த நிலையில் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பெண்கள் குடிநீர் வேண்டுமென குடிநீர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் உரையாடி குடிநீர் வழங்க வழிவகை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்து சாலை மறியலை கைவிடப்பட்டது
இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது