BREAKING NEWS

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பெருமாள் கோவிலில் சம்சத்ரு விழா நடைபெற்றது.

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பெருமாள் கோவிலில் சம்சத்ரு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருமணஞ்சேரியில் உள்ள ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள் பாளித்து வருகிறார்.

இந்த கோவிலில் கடந்த 2002ம் ஆண்டு ஜுலை14ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் சம்சத்ரு விழா (பத்தாவது கும்பாபிஷேக தின)விழா வியாழன்கிழமை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை லெட்சுமி நாராயண பெருமாளுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன்,பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது.

 

பின்னர் வண்ணமலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், காளிங்க நர்த்தனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகாதீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை எஸ்.நாராயண பட்டாச்சாரியார் செய்தார். இதில் கோயில் நிர்வாகி ஜி.ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )