BREAKING NEWS

குத்தாலம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.

குத்தாலம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா,குத்தாலம் திரௌபதியம்மன் திருக்கோயில்
105 -ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது .

முன்னதாக காவிரித் தீர்த்தப்படித்துறையிலிருந்து சக்தி கரகம் அழகு காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமக கோவிலை வந்தடைந்தனர் பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டுயிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை திரௌபதி அம்மனுக்கு செலுத்தினர் .

தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர் இரவு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திரௌபதி அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS