BREAKING NEWS

குற்றம்

போக்சோவில் ஆசிரியர் கைது!

பெரம்பூர்,ஏப்.14:. சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். அதில் சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டையில் தோட்ட வேலை செய்து வருகின்றனர். அவளின் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஓட்டேரியில் உள்ள அவளது சித்தப்பா ஹரிமஞ்சன்(47) வீட்டில் தங்கி ஓட்டேரி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். ஹரிமஞ்சன் தனியார் பள்ளியில் தமிழாசிரியர். வீட்டில் ஆள் இல்லாதபோது அடிக்கடி ஹரிமஞ்சன் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மகளிர் போலீசார் ஹரிமஞ்சனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )