கேஸ் விலை உயர்வை வலியுறுத்தியும் நலிவடைந்துள்ள மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருமணத்தின் போது மணமக்கள் மண்பானையை வழங்கினார்.

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியை சேர்ந்த அந்தோணி மற்றும் இசைப்பிரியா ஆகியோரது திருமணம் புளியரை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துவதற்காக அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர் மணமகன் மணமகள் ஆகிய இருவரும் கேஸ் விலை உயர்வால் பொதுமக்கள் அடையும் கஷ்டத்தையும் வலியுறுத்தியும் நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வை ஊக்குவிக்கும் வண்ணம் மண்பாண்டங்களை பொதுமக்கள் வாங்கி உணவு பொருட்களில் சிலவற்றை மண்பாண்டங்களில் சமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மணமக்கள் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மண்பாண்ட பானைகளை வழங்கினர்.
CATEGORIES தென்காசி
TAGS மாவட்ட செய்திகள்