BREAKING NEWS

கே.வி.குப்பம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா

கே.வி.குப்பம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பில்லாந்திபட்டு காவாக்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

முன்னதாக ஸ்ரீ பொன்னியம்மனுக்கு கூழ்வார்த்து பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கார பூஜை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு ஊர்வலம் , தாரை தப்பட்டை முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது அப்பொழுது பக்தர்கள் பூமாலை சூட்டியும் தேங்காய் உடைத்தும் கற்பூரம் தீபம் ஏற்றியும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர் பின்னர் கோவிலை வந்தடைந்த சிரசு அம்மன் உருவத்தில் ஏற்றப்பட்டது

பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் இரவு அதிரடி வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்

Share this…

CATEGORIES
TAGS