கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கங்கை அம்மன் சிரசு திருவிழா

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கங்கை அம்மன் சிரசு திருவிழா
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழா முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.
முன்னதாக ஆதிகேசவ பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சாமிகள் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து கீழ்ஆலத்தூர் கிராமத்தில் பிள்ளையார் கோயிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக வந்து பின்னர் கோயிலில் அம்மன் சிரசு ஏற்றப்பட்டது.
விழாவில் உள்ளூர் வெளியூர் வெளி மாநிலத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். புத்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதை தொடர்ச்சியாக வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
CATEGORIES வேலூர்