BREAKING NEWS

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கூழ்வார்த்தல் ஆகியவை நடைபெற்றது அம்மன் சிரசு விநாயகர் கோவிலில் அருகே ஸ்ரீ மகாநந்த சித்தரால் பூஜை வழிபாடு செய்து பின்னர் கண் திறத்தல் நடந்தது.

இதனையடுத்து கிராமத்தில் இருந்து அம்மன் சிரசு கிராமத்து சிறுவர்கள் இளைஞர்கள் சிலம்பாட்டம் கோலாட்டத்துடன் ஊர்வலமாக வந்து அம்மன் கோயிலில் சிரசு ஏற்றப்பட்டது.

இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் மக்கள், இளைஞர்கள் செய்தனர்.

CATEGORIES
TAGS