BREAKING NEWS

கொடுக்கூர் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் ஒரே நாளில் 3 கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.

கொடுக்கூர் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் ஒரே நாளில் 3 கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் அமைந்துள்ள பிரசித்தி அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பழைமையான இந்த கோவிலில் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பல ஆண்டுகள் கடந்த நிலையில் கோவிலாக இருந்ததை அகற்றி ஆகம விதிப்படி புதிதாக கட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடை பெற்றது. முன்னதாக கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இரண்டு கால யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாஹூதி அளிக்கப்பட்டன.

பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத் தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பங்கேற்றனர்.

புனித நீரான கங்கை தீர்த்தம் காவேரி தீர்த்தம் கும்பகோணம் மகாமக குலத்தின் தீர்த்தம் ராமேஸ்வரம் கோட்டி தீர்த்தம் உள்ளிட்ட புனித நீர்களை பூஜை செய்து நவாக்கினி குண்டங்கள் பஞ்ச குண்டங்கள் வளர்ப்பு கோபி சிவம் சிவாச்சாரியார் தலைமையில் 15 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மங்கல வாத்தியங்கள் முழங்க பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சரியாக காலை 9:40 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர்க அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புனித நீரானது பக்தர்கள் மேல் நெல் பூக்கள் நவதானியங்களும் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விழா சார்பில் அன்னதான வழங்கப்பட்டது இன்று இரவு சாமி வீதியுலா நடைபெறும் என்பது குறிப்பிடப்பட்டதாகும்.

CATEGORIES
TAGS