BREAKING NEWS

கொடைக்கானல்-வில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை பணிகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கொடைக்கானல்-வில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை பணிகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டின் தாய் கிராமம் என்று அழைக்க கூடிய வில்பட்டி கிராமம் தமிழ்நாட்டில் மிக பெரிய பஞ்சாயத்து வில்பட்டியில் பல கிராமங்கள் உள்ளது இதில் பேத்துப்பாறை கிராமமும் அடங்கும் பேத்துப் பாறை கிராமத்தை சுற்றி பல கிராமங்கள் உள்ளது இந்த கிராமத்தில் சுமார் 1000 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் கிராமத்துக்கு செல்லும் சாலை பல வருடங்களாக சேதம் அடைந்தது இருக்கின்றன சாலையை சரி செய்து தர பல முறை அரசு அதிகாரிகளிடம் கூறி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் தற்போது மழை பெய்து சாலை மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதால் பள்ளி மாணவ மாணவியர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் கற்பனி பெண்களை ஏற்றி உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை இருசக்கர வாகனங்கள் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் முன் சாலையை சரி செய்து தருவார்களா என்று சுற்றுவட்ட கிராம மக்கள் கோரிக்கையாக உள்ளது….

CATEGORIES
TAGS