BREAKING NEWS

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது,

கனமழை காரணமாக வேமாண்டம்பாளையம் பெரிய குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் வேமாண்டம்பாளையம் – கொளத்துப்பாளையம் கிராம சாலையிலுள்ள தரைமட்ட பாலத்தையும், நம்பியூர் – புளியம்பட்டி சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தையும் தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் அந்த சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது,

மேலும் அழகம்பாளையம் – எம்மாம்பூண்டி கிராம சாலை அதிகளவு நீர்வரத்து காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் நம்பியூர் செட்டியம்பதி குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் குளம் நிரம்பும் தருவாயில் இருக்கும் நிலையில் தாழ்வான பகுதிகளான பிலியம்பாளையம், செட்டியம்பதி பேருந்து நிலையம், பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வருவாய் துறை மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS