BREAKING NEWS

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கோபி மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கோபி மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்தது,

தகவலின் அடிப்படையில் பவானி சென்ற மதுவிலக்கு காவல்துறையினர் பவானி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர், சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மதிவாணன்(40) என்பதும், திருச்செங்கோடு சி.எஸ்.ஐ. தெருவை சேர்ந்த சிவசக்தி(22) என்பதும், திருச்செங்கோடு சின்னகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (25) என்பதும் தெரியவந்தது .தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த மதுவிலக்கு காவல்துறையினர் கோபியில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Share this…

CATEGORIES
TAGS