கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு.

கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு.
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் போலீஸ் வாலிபால் கிளப் சார்பில் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான கோடைகால கைப்பந்து சிறப்பு பயிற்சி முகாம் 15 தினங்களாக நடைபெற்று வருகிறது.இதன் நிறைவு விழா இன்று நடைபெற்றது.கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கிய பயிற்சி முகாம் மே 10ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி பயிற்சி பெற்றனர்.
பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கைப் பந்து கழக ஒருங்கிணைப்பாளரும் சர்வதேச கைப்பந்து நடுவருமான ஸ்ரீனிவாசன், சர்வதேச கைப்பந்து வீரர் மங்கள ஜெயபால், செயலாளர் , தலைவர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் , பயிற்சியாளர்கள் , காவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.