BREAKING NEWS

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது – அரிவாள்கள் பறிமுதல்.

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது – அரிவாள்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள்கள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

கோவில்பட்டியில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

 

 

அப்போது அந்த வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து சுமார் இரண்டரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார்,மூன்று அரிவாள் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.

 

மேலும் இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த மேலபாண்டவர்மங்கலம் அக்ரஹார தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (22), அன்னை தெரசா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), போஸ் நகர் 4வது தெரு சேர்ந்த சங்கிலிபாண்டி (21) ஆகியோரை கைது செய்தனர். கோவில்பட்டியில் வீட்டில் கஞ்சா வைத்து விற்பனை செய்த கும்பலிடமிருந்து அரிவாள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )