BREAKING NEWS

கோவை செட்டிபாளையம் பகுதியில் கரி மோட்டார்ஸ் ஸ்பீட் வே பந்தய தளத்தில், கேடிஎம் மோட்டார்ஸ் நடத்தும் 2வது தேசிய அளவிளான மோட்டார் பந்தய போட்டிகளில் சீறி பாய்ந்த பைக் வீரர்கள்..

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீட் வே பந்தய தளத்தில், கேடிஎம் மோட்டார்ஸ் நடத்தும் 2வது தேசிய அளவிளான மோட்டார் பந்தய போட்டிகள் இன்று துவங்கியது. இதில், பல்வேறு வீரர்கள் கேடிஎம் பைக்கில் பந்தயதளத்தில் தங்களது திறன்களை வெளிபடுத்தினர், முன்னதாக,
பாதுகாப்பான முறையில் இருசக்கர வாகனத்தை இயக்குவது எப்படி என அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய 7முறை இந்திய தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இமானுவேல் ஜெபராஜ் கூறும்போழுது..


கேடிஎம் பைக் நிறுவனத்தின் சார்பாக இந்த ஆண்டு கரி மோட்டார்ஸில் பந்தயத்தை துவங்கி உள்ளனர். கடந்த ஆண்டு 8 பிரிவுகளாக நடத்த பட்டு அதில் வெற்றியடைந்ததை தொடர்த்து இந்த ஆண்டு 4 ஜோன்களாக பிரித்து சீசன் 2 நடைபெற்று வருகின்றது. இதில் செலக்ட் ஆகும் 15 நபர்கள், மற்றும் 4 குழுவாக 60 பேர் தேர்வு செய்ய பட்டு போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார் குறிப்பாக
கேடிஎம் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான முறையில் எப்படி மோட்டார் பந்தயத்தில் கலந்து கொள்வது பொதுவான விதிமுறைகள் பெண்களுக்கு ஆண்களுக்கு தனியாகவும் பயிற்சி கொடுத்து வருகிறோம் டெல்லி, கல்கட்டா, மும்பை, பகுதிகளில் செலக்சன் நடைபெறும், மே மாதம் கோவையில் இறுதி போட்டிகள் நடைபெறும் என தெரிவித்தார் இன்று நடைபெற்ற பயிற்சியின்போது இரு சக்கர வாகனத்தை அதி வேகமாக இயக்கி தங்கள் திறமையை வீரர்கள் வெளிப்படுத்தி முதல் சுற்றுக்குள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS