BREAKING NEWS

சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்

சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் வகையில், கலைத் திருவிழா போட்டிகளை பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 2025 – 26 -ல் கல்வியாண்டில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

“பசுமையும் பாரம்பரியமும் ” என்ற தலைப்பில் தனிநபர் நடிப்பு பிரிவில் 11-ம் வகுப்பு மாணவர் அஜய் மாநில அளவில் முதலிடம் பெற்றார். முதலிடம் பிடித்த அஜயை பள்ளி தலைமை ஆசிரியை தெய்வ பிரியா, பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியர் சங்கர் ராம், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

Share this…

CATEGORIES
TAGS