BREAKING NEWS

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார் !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் ஊராட்சியில் பகுதியில் ரூ.12.50 லட்சம் மதிபீட்டில் சமையல் அறையுடன் கூடிய புதிய அங்கன்வாடி கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் ஒதுக்கீடு அடிப்படையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கட்டிட பணிகள் துவக்கிய நிலையில் பணிகள் முழுவதும் நிறைவடைந்து .

இந்த நிலையில் அதன் திறப்பு விழா ஏற்பாட்டை மாவட்டத் தலைவர் சுரேந்தர் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன். தேவராசு.ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனுக்கு கலந்துகொண்டு ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள

சமையல் அறையுடன் கூடிய புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களுக்கு அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள் மலர்களைக் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சிறுகிராமம் நத்தம் ராயர் பாளையம் சேமக்கோட்டை வீரப்பார் நத்தம் மாளிகமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் கட்டிடப் பணிகள் முடிவடைந்து.

தயார் நிலையில் இருந்த பள்ளிக்கட்டிடம் நியாய விலை கடை கலைக்கூடம் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

நிகழ்ச்சியில் பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர் ஏராளமான பொதுமக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS