BREAKING NEWS

சாமியார் ரவியை அடித்து கொலை செய்து புதைத்த நான்கு பேர் அதிரடி கைது!

சாமியார் ரவியை அடித்து கொலை செய்து புதைத்த நான்கு பேர் அதிரடி கைது!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி அருகே சாமியார் ரவியை அடித்து கொலை செய்து புதைத்த நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டம், மேல்பாடி காவல் நிலையத்தில் மேல்பாடி கிராம நிர்வாக அலுவலர் யோகேஸ்வரன் கடந்த 14ஆம் தேதி பணியில் இருந்த போது மேல்பாடி கோட்டநத்தம் கிராமத்தில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் என்பவர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து தானும் தனது கூட்டாளிகள் நான்கு பேரும் சேர்ந்து வள்ளிமலை கோயில் அருகே சாமியாராக இருந்து வந்த ரவி என்பவரை கடந்த 11ஆம் தேதி தனது செல்போனை திருடியதாக எண்ணி ரவி வேலை செய்துவரும் விவசாய நிலத்திற்கு சென்று திருடிய செல்போனை திரும்ப கொடுக்கும்படி கூறி அடித்துக் கொன்று சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.

இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் கூறிய புகாரை பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என்.. மணிவண்ணன் உத்தரவின் பேரில், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் வழிகாட்டுதலின்படி, பொன்னை வட்ட காவல் ஆய்வாளர் அன்பரசி மற்றும் மேல்பாடி காவல் உதவி ஆய்வாளர் சீதா தலைமையான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் நரசிம்மன் மகன் ஹரிகிருஷ்ணன் (39) கோட்டை நத்தம் கிராமம், ராஜேந்திரன் மகன் மதன்ராஜ் (34 ), கோட்டநத்தம், தணிகேசன் மகன் பிரபு (42) வள்ளிமலை, மேல்பாடி பூபதி மகன் லோகேஷ் (34 )ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் நான்கு பேரும் வேலூர் தொரப்படியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS