BREAKING NEWS

சிங்கிரி கோயில் ஶ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிப்பு!

சிங்கிரி கோயில் ஶ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிப்பு!

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோயிலில் ஶ்ரீதேவி-பூமி தேவி சமேத ஶ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஶ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது.

பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் பிரசாதங்கள் தயார் செய்து கொண்டு வந்து பக்தர்களுக்கு அன்னதானமாக விநியோகம் செய்தனர். இதேபோல் வரும் 22ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் ஶ்ரீநரசிம்ம பெருமாளுக்கு ம், ஶ்ரீதேவிக்கும், ஶ்ரீபூமிதேவிக்கும் திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெற உள்ளது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. ஆலய நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

CATEGORIES
TAGS