BREAKING NEWS

சினிமா

சூர்யா-பாலா பட ஷூட்டிங் தொடங்கியது.

சூர்யா-பாலா பட ஷூட்டிங் தொடங்கியது

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங், கன்னியாகுமரியில் இன்று தொடங்கியுள்ளது.

’எதற்கும் துணிந்தவன்’ படத்தை அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை பாலா இயக்குகிறார். ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இருவரும் மீண்டும் இணைகின்றனர். சூர்யாவின் 41-வது படமான இதில், அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு கேரக்டரில், வாய் பேச இயலாத, காது கேளாதவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கும் என்று கூறப்பட்டது. செட் வேலை முடிவடையாததால், ஷூட்டிங் தொடங்குவது தள்ளிவைக்கப்பட்டது. கடற்கரை பகுதியில் நடக்கும் கதையை கொண்ட படம் என்பதால் கன்னியாகுமரி அருகே படத்துக்காக கிராமம் செட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, ’என் வழிகாட்டியான இயக்குநர் பாலா, ’ஆக்‌ஷன்’ என்று சொல்வதற்காகக் காத்திருந்தேன். 18 வருடங்களுக்குப் பிறகு இன்று அந்த மகிழ்ச்சி நடந்திருக்கிறது. இந்த தருணத்தில் உங்கள் வாழ்த்துகள் தேவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )