சினிமா
கசிந்த பீஸ்ட் படத்தின் கதை இது தான்!! வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்!!
தமிழகத்தில் முண்ணனி கதாநாயகன்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரின் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஏப்ரல்13 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் டிரெய்லர் வெளியான நேரத்தில் ஹிந்தி டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் வருண் தவான்
இந்த டிரெய்லரை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி. நான் விஜய் சாரின் பெரிய ரசிகன். தெலுங்கு டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கேலக்ஸி திரையரங்கம் பீஸ்ட் படக் கதையை வெளியிட்டுள்ளது. அதன்படி நகரின் பரபரப்பான பகுதியில் சர்வதேச பயங்கரவாதிகள் நுழைந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்க இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியும் சிக்கியிருப்பது தெரியவருகிறது. இந்திய அரசு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப் பட்டவர்களை மீட்க, அவரது உதவியை நாடுகிறது. உள்ளே இருந்தபடியே அந்த அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறார்.
அதற்குள் பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. முன்னால் உளவுத்துறை அதிகாரி தமது சாமர்த்தியத்தால் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களை முழுமையாக எவ்வாறு ஒழித்துகட்டுகிறார் என்பதே கதை எனக் குறிப்பிட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் கதை இது தான். இந்த கதை வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.