BREAKING NEWS

சினிமா

ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ.

ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ

ஷங்கர் இயக்கத்தில் நடிக்க பிரபல ஹீரோ மறுத்துள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. RC15 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். ஏராளமான பொருட்செலவில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு புணே அருகே பிரம்மாண்ட அரங்கம் அமைத்து நடைபெற்றது. அதில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்து வருகிறது.

ஜூன் மாதத்துக்குள் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, 6 மாதம் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்குத் திட்டமிட்டுள்ளனர். அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மோகன்லால்

முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பிரபல மலையாள ஹீரோ மோகன்லாலிடம்தான் கேட்டுள்ளனர். அவர் ஏற்கெனவே சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் இந்தக் கதையில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஊழல் அமைச்சர் கேரக்டராம் அது. பிரம்மாண்டமாக அவர் கேரக்டர் அமைக்கப்பட்டிருந்தாலும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )