BREAKING NEWS

சினிமா

விரைவில் துவங்கும் ‘ஜிகர்தண்டா 2’… ஹீரோ ராகவா லாரன்ஸ்.

‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தை கதிரேசன் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் நடிகர் சித்தார்த் குறும்பட இயக்குனராகவும், பாபி சிம்ஹா கேங்ஸ்டராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். கார்த்திக் சுப்புராஜ் இளைய தலைமுறை இயக்குனராக இந்தப் படத்தின் மூலம் மிளிர்ந்தார். சிறந்த துணை நடிகர் மற்றும் படத்தொகுப்பிற்காக இந்தப் படத்திற்கு இரு தேசிய விருதுகளும் கிடைத்தது.


இந்நிலையில் தற்போது ஜிகர்தாண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளனர். மற்றொரு பான் இந்தியா நடிகரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )