BREAKING NEWS

சினிமா

4 கப்பல்களை வாடகைக்கு வாங்கி ’அகிலன்’ ஷூட்டிங்.

நான்கு கப்பல்களை வாடகைக்கு வாங்கி, ’அகிலன்’ படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது.

ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த ’பூலோகம்’ படத்தை அடுத்து, கல்யாண் இயக்கும் படம் ’அகிலன்’. இதிலும், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்து வருகின்றனர். ஜெயம் ரவியின் 28வது படமான இதில் அவர், மரைன் இன்ஜினீயராக நடிக்கிறார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காசிமேடு அருகே நடந்து வருகிறது. துறைமுகப் பகுதி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு விதவிதமான நான்கு சரக்கு கப்பல்களை வாடகைக்கு வாங்கி, படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இதுபற்றி படக்குழு கூறும்போது, “கண்டெய்னர் கப்பல் உட்பட நான்கு விதமான சரக்கு கப்பல்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அதற்கான வாடகை அதிகமானதுதான். இருந்தாலும் கதைக்கு முக்கியம் என்பதால் அதில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. 90 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )