சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு
திருவெண்ணைநல்லூர் சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா என பாடல் பெற்ற திருத்தலமான ஸ்ரீ மங்களாம்பிகை சமேத கிருபா புரிஸ்வர் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் பகுதிகளை சுத்தம் செய்யும் பணியை நம்பி ஆரூரான் உழவாரப் பணி குழு சார்பில் நடைபெற்றது.இதில் கோவில் செயல் அலுவலர் அறிவழகன் தர்மகத்தா ராஜாராமன், சக்கரவர்த்தி,செல்வி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சும் கணேசன் இவர்களுடன் திருவெண்ணைநல்லூர் பத்திரிக்கை நிருபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அங்குள்ள செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியினை சிறப்பாக மேற்க்கொண்டனர்.
CATEGORIES விழுப்புரம்