BREAKING NEWS

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.

வாகன ஓட்டிகள் வாக்கு பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில் வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வாகனங்களை எடுத்து சென்றனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. நாளை வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் இருந்து வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

கயத்தார் பகுதியில் உள்ள வாக்கு சாவடி மையங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றால் கயத்தார் சாலைப்புதூர் சுங்கச்சாவடியை தண்டி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே வாக்கு பெட்டி மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி கட்டணம் கொடுத்தால் தான் கொண்டு சொல்வோம் என்று கூறி வருவதால் வாக்கு சாவடி மையங்களுக்கு பொருள்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இதை போன்று வாக்குச் சாவடி மையங்களுக்கு பொருள்களை கொண்டு சென்ற போது தங்களிடம் சுங்கச் சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியர் சரவண பெருமாள் வாகன ஓட்டிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டது எடுத்து வாகனங்களை அந்தந்த வாக்குச்சாவடி இமயங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

CATEGORIES
TAGS