சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு: காரணம் என்ன?

அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்த அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அமெரிக்க படைகள் நேற்று முன்தினம் காபூலில் திடீர் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்.
CATEGORIES Uncategorized