BREAKING NEWS

செய்யாறில் மின் உயர்வை திரும்ப பெற கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் !

செய்யாறில் மின் உயர்வை திரும்ப பெற கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் !


செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் உயர்வை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தாலுக்கா அலுவலகம் எதிரில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் கே.வெங்கடேசன் வரவேற்றார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி தாலுக்கா பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், ஜாகிர் உசேன், டி.கே.பி மணி, விமலா மகேந்திரன், சுப்புராயன், ராணி பெருமாள், ஜனார்த்தனன், அருணகிரி, ரவிச்சந்திரன், மெய்யப்பன், கோபால், கோவிந்தராஜ், அருண், அரவிந்த், ரகு, பாலன், பெருமாள், அரங்கநாதன், மகேந்திரன், துரை, திருமூலன், ராமநாதன், தசரதன், செபாஸ்டின் துரை, சுதாகர், பிரகாஷ், சுரேஷ், தணிகாசலம், எழில், இளையராஜா, பாலாஜி,பெரணமல்லூர் நகர துணை செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS