BREAKING NEWS

சோளிங்கர் அருகே அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோளிங்கர் அருகே அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோளிங்கர் அருகே அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம் முன்னிட்டு விஷ்ணு விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்ட மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோ பூஜை, கலச பூஜை, 108 மூலிகை கொண்டு சிறப்பு யாக பூஜை செய்து பூர்ணஹீதி நடைபெற்றது.பூஜை செய்யப்பட்ட கலச புனித நீர் மூலவர் விஷ்ணு விநாயகர், கோபுரத்திற்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள். கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் கிராம மக்கள் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS