BREAKING NEWS

டைவஸ் தருவதாக கூறி நிலத்தை வாங்கிக் கொண்டு மாமனார் மாமியாரை கொலை மிரட்டல் செய்யும் மருமகள் வீட்டார்.

டைவஸ் தருவதாக கூறி நிலத்தை வாங்கிக் கொண்டு மாமனார் மாமியாரை கொலை மிரட்டல் செய்யும் மருமகள் வீட்டார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள அண்ணா நகரில் வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கு சொந்த அத்தை பெண் அன்னலட்சுமி யை திருமணம் செய்து வைத்தனர் இவர்களுக்கு திருமணம் ஆனது இருந்து சில கருத்து வேறுபாடு காரணமாக சண்டை நடந்து வந்துள்ளது.

நாளடைவில் விவாகரத்து செய்யும் சூழ்நிலைக்கு வந்த பின்பு ஊர் பெயர்கள் முன்னிலையில் விவாகரத்து செய்வதற்கு ஒப்பந்தம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது கடத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய அன்றைய காவல்துறை ஆய்வாளர் மாரப்பன் [Si] அவர்தான் அன்று விவாகரத்து செய்வதற்கு இரண்டு தரப்பினர்ரையும் அழைத்து மணமகன் வீட்டார் இடம் 2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தால் விவாகரத்தில் கையப்பம் இடுகிறோம்  என்று பெண் வீட்டார் கூறியுள்ளனர்.

இதற்கு மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதம் தெரிவித்து ரிஜிஸ்டர் ஆபீஸ் க்கு சென்று இரண்டு ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துவிட்டனர் பின்பு நிலத்தை வாங்கிக் கொண்டு விவாகரத்தில் கையொப்பம் போட மாட்டோம் என்று தகராறில் ஈடுபட்டனர் அன்று முதல் இன்று வரை பத்தாண்டு காலம் ஆகிவிட்டது இன்னும் அவர்களிடம் இருந்து எந்த ஒரு சண்டைகளும் பிரச்சனைகளும் இல்லாத நாலே கிடையாது நிலத்தை எழுதிக் கொடுத்தால் விவாகரத்து செய்து தருகிறோம் என்று கூறிவிட்டு நிலத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு இன்று வரை நிலத்தையும் திரும்ப கொடுக்காமல் விவாகரத்தும் கொடுக்காமல் அடிக்கடி சண்டையில் ஈடுபடுகின்றனர்.

இடைக்காலங்களில் அடிதடி வெட்டு குத்து என நிறைய பிரச்சனைகளை செய்து வந்தும் நாங்கள் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இருப்பினும் நாங்கள் அமைதியாக உள்ளோம்.

எங்களுக்கு உதவி செய்ய சொந்த பந்தம் யாரும் இல்லை என்னுடைய ஒரே மகன் சீனிவாசன் மட்டும் தான் எங்களையும் எங்கள் மகளுடைய குழந்தைகளையும் துணிமணி மற்றும் அவர்களின் படிப்பு செலவுகளை அனைத்தையும் அவர்தான் பார்த்து வருகிறார்.

தற்சமயம் காவல்துறையினர் அவரையும் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடும் என்று மிரட்டி வருகின்றனர் எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் காவல்துறை உயர்க கண்காணிப்பாளர் அனைவரிடமும் எங்களை பாதுகாக்கும் படி கோரிக்கை மனு வைக்கின்றோம்.

CATEGORIES
TAGS