BREAKING NEWS

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து முதுகுளத்தூர் தபால் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் :

முதுகுளத்தூர் தபால் நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து முதுகுளத்தூர் தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் மத்திய ஆளும் பாஜக மோடி அரசை கண்டித்து கோஷம் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 33க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்

Share this…

CATEGORIES
TAGS