தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் மயிலாடுதுறையில் வேலை நிறுத்தம்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சரண் விடுப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாக தொடர் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தர்ணா போராட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
CATEGORIES மயிலாடுதுறை