BREAKING NEWS

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெறும் பயிற்சி திறன் -அமைச்சர் c.v.கணேசன் நேரில் ஆய்வு

 

 

 

 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி திறன் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் c.v. கணேசன் நேரில் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி வி கணேசன் அவர்கள் திடீரென தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி திறன் அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்,
இந்த ஆய்வின் போது வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசிய
திறன் மேம்பட்டு அமைச்சர், கூறுகையில் படித்தால் முன்னேறலாம் என்றும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற படிப்பு மிகவும் முக்கியமானது என்றும் தமிழக அரசு பல முக்கிய வேலை வாய்ப்பினை தமிழக முதல்வர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திரைப்பட செயல்பட்டு வருகிறது என்றும் இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நான் கடுமையாக உழைத்தேன் தமிழக முதலமைச்சர் அவர்கள் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார் இதை மென்மேலும் சிறப்பாக செய்வேன். இதே போல் நீங்களும் படித்து முன்னேற வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார் தொடர்ந்து பயிற்சி கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சியில் கொடுக்கப்பட்ட புத்தகங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் மற்றும் வேலைவாய்ப்பு கமிஷனர் சுந்தரவல்லி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Share this…

CATEGORIES
TAGS