BREAKING NEWS

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தோழி வி.கே.சசிகலா அவர்களின் பிறந்தநாள் விழாவினை ஈரோட்டில் வெகு விமர்சியாக கொண்டாடினர்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தோழி வி.கே.சசிகலா அவர்களின் பிறந்தநாள் விழாவினை ஈரோட்டில் வெகு விமர்சியாக கொண்டாடினர்.

அஇஅதிமுக மீண்டும் ஒன்று இணைய வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் வி.கே.சசிகலா அவர்களின் ஆதரவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் அவரது பிறந்த நாள் விழாவினை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

 

அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் சசிகலா ஆதரவாளர் சௌகத் அலி தலைமையில் நண்பர்களுடன் இணைந்து சசிகலா அவர்களின் பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து , 300-க்கும் மேற்பட்ட பெண்களை வரவழைத்து அவர்களுக்கு இருக்கையில் அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு குளிர்பானங்கள் கொடுத்து அமர வைத்தனர்.

 

மேலும் இந்த நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா அவர்களின் அர்ப்பணிப்பு பற்றியும், வருங்காலத்தில் அவர்கள் அரசியலில் ஈடுபட்டால் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் வழங்கினர்.

CATEGORIES
TAGS