BREAKING NEWS

தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தில் அமைந்துள்ள காரிய சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-

தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தில் அமைந்துள்ள காரிய சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கும் கிராமத்தில் பழமை வாய்ந்த காரிய சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த 31ஆம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது .

இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை பூர்ணகுதியுடன் நிறைவடைந்தது தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு மகா அபிஷேகமும் மகாதீபாரதனையும் செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS