தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடகா உயர்நீதி மன்றத்தை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அனைத்து முஹல்லா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் திருநெல்வேலியை சேர்ந்த ஜமால் முகமது ராஜா முகமது (எ) மவுலவி ஜமால் உஸ்மாணி ஆகிய இருவரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆகியோரை தரைகுறைவாக பேசியதாகவும் இந்து-முஸ்லிம் இடையில் கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசியதாக கிராம நிர்வாக அலுவலர் கௌரிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். நேற்று இரவு ஜமால் உஸ்மானியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தீவிரமடையும் எனவும் எச்சரித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
