BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

முதல்வருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு.

முதல்வருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் 3 வருடத்துக்கு பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது. இதில், தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

நடிகர்கள் ராஜேஷ், பிரசன்னா, சிபிராஜ், நந்தா, ரமணா, சரவணன், ஸ்ரீமன், மனோபாலா, அஜய் ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, விக்னேஷ், தளபதி தினேஷ், பிரேம்குமார், ஜெரால்டு, ரத்னப்பா, பிரகாஷ், ஹேமச்சந்திரன், காளிமுத்து, வாசுதேவன், நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, சோனியா ஆகிய 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

நடிகர் சங்கச் செயற்குழு கூட்டம் நாசர் தலைமையில் இன்று மாலை நடக்கிறது. இதில் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க இருக்கிறார்கள். இதற்கிடையே நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அவர்களுடன் செயற்குழு உறுப்பினர்கள், சரவணன், மனோபாலா, தளபதி தினேஷ், காளிமுத்து, வாசுதேவன், அஜய் ரத்தினம், ஜெரால்டு, லலிதா குமாரி, ஹேமச்சந்திரன், சோனி, கோவை சரளா, லதா, ஸ்ரீமன், சவுந்தர், வழக்கறிஞர் கிருஷ்ணன், பொதுமேலாளர் பாலமுருகன் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )