BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

தமிழகம் முழுவதும் வார்டு உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையதில் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்கு உட்ப்பட்ட அரசிராமணி பேரூராட்சியில் மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2-வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

இதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக தனிநபர் இடைவெளியை, கிருமிநாசினி, கையுறை, முககவசம், வெப்பநிலை பரிசோதனை செய்து பொதுமக்களை தங்களின் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் வேட்ப்பளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் இருக்கவும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கவும் தேவூர் காவல் துறையினர் 10 ற்க்கும் மேற்ப்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி அரசிராமணி பேரூராட்சி 2-வார்டில் மொத்தம் 729 வாக்குகள் உள்ளநிலையில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )