தலைப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளை கைது செய்ய தடை.

5 கோடி நில அபகரிப்பு வழக்கில் முன்ஜாமீன் கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளை காவல்துறை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாருக்கும் அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
