தலைப்பு செய்திகள்
உ.பி: யோகியின் தேநீர் விருந்தில் பங்கேற்கும் எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் யோகமா?
உத்தர பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக இன்று (மார்ச் 25) பதவியேற்கும் யோகி ஆதித்யநாத், பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்திருக்கிறார். முலாயம் சிங்கின் மகனும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவையும் அழைத்திருக்கிறார்.
முன்னதாக, நேற்று நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பாஜக தலைவராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆளுநர் ஆனந்திபென் படேலைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவையில் யார் யார் இடம்பெறப்போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
CATEGORIES முக்கியச் செய்திகள்