BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

“நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசுகள் நடைமுறைப்படுத்துவதில்லை” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புகாரை அடுத்து நீதிபதிகள் பற்றி  அவதூறு கருத்து வெளியிட்ட 5 பேர் கைது: சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை ...

டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த மாநாடு இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

கரோனா உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகள் தள்ளிப்போன இந்த மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி பேசுகையில், “நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கையை அதிகரிக்கும்” என்றார்.

அவரைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில்,, “பொதுநல வழக்குகளின் (பிஐஎல்) பின்னால் உள்ள நல்ல நோக்கங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இது ‘தனிப்பட்ட நலன் வழக்குகளாக’ மாற்றப்பட்டு, திட்டங்களைத் தடுத்து, பொது அதிகாரிகளைப் பயமுறுத்துகிறது. அரசியல் மற்றும் கார்ப்பரேட் போட்டியாளர்களுடன் மதிப்பெண்களை தீர்க்கும் கருவியாக இது மாறியுள்ளது” என்றார்.

“பெண் நீதிபதிகள் நீண்ட நேரம் நீதிமன்றங்களில் அமர பயப்படக்கூடிய நிலைமைதான் தற்போது இருக்கிறது. நீதிமன்றங்களை அதிக அளவில் அணுகக்கூடியது அரசாங்கங்கள்தான். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசுகள் நடைமுறைப்படுத்துவதில்லை” என்று அவர் கவலை தெரிவித்தார்.

மேலும்,” சம்பந்தப்பட்ட மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை உள்ளடக்கிய முழுமையான விவாதங்களுக்குப் பிறகு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். நிர்வாகிகள் செயல்படாதது மற்றும் சட்டமியற்றும் சபைகளின் செயலற்ற தன்மை காரணமாக அடிக்கடி வழக்குகள் தவிர்க்கப்படக் கூடியவையாக உள்ளன. நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் முறையாக கடமையாற்றினால், போலீசார் முறையாக விசாரணை செய்தால், சட்ட விரோத காவலில் சித்திரவதைக்கு முடிவு கட்டினால், மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டி அவசியமில்லை” என்றார்.

“நாடு முழுவதும் 4 கோடி வழக்குகளின் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. 10 லட்சம் பேருக்கு வெறும் 20 நீதிபதிகள்தான் இருப்பதால் வழக்குகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. காவல் துறை, பதிவுத்துறை என்று அரசின் ஒவ்வொரு துறையும் அதன் பணியை சட்டப்படி செய்திருந்தால் பல வழக்குகள் நீதிமன்றத்துக்கு வர வேண்டியதே இருந்திருக்காது” என்று அவர் கூறினார்

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )