தலைப்பு செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேற்று இரவு நாய் ஒன்று இறந்து கிடந்த நிலையில் சுற்றியுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டிருந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை 4வது வார்டு பகுதி கமர் மசூதி அருகே நேற்று இரவு நாய் ஒன்று இறந்து கிடந்த நிலையில் சுற்றியுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டிருந்தது.
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து நகராட்சிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் நகராட்சி ஊழியர்கள் யாரும் வராத காரணத்தால் இந்த தகவலை 4வது வார்டில் தென்னை மரச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட முஹம்மத் சபீல் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்ததை அடுத்து சில விநாடிகளில் அவர்களின் ஆதரவாளர்கள் சித்திக் , மற்றும் ஆசிம் ஆகியோர் ஒரு சாக்குப்பையில் இறந்துபோன நாயை தாங்களாகவே எடுத்துப்போட்டு அதனை ஆற்றுப் பகுதியில் வைத்து வந்தனர் இதனால் அப்பகுதி மக்கள் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் முஹம்மத் சபீல் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.