BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் திமுக அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

11.20 AM: திருநெல்வேலி மாநகராட்சி 35 வது வார்டில் திமுக வேட்பாளர் பேச்சியம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.

11.15 AM: சென்னை மாநகராட்சியில் 196வது வார்டில் அதிமுக வேட்பாளர் அஸ்வினி கருணா வெற்றி பெற்றுள்ளார். 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி பட்டியலின பெண் மேயர் பதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் படி 22 இடங்களில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை, வெற்றி பெற்றுள்ளன.

11.10 AM: திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகளில் திமுக 12, அதிமுக 1, பாஜக 1 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

11.00 AM: கரூர் மாநகராட்சி 11 வது வார்டில் அதிமுக வேட்பாளர் தினேஷ் குமார் 26 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதிமுகவின் முதல் வெற்றி . திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் திமுக உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் திமுக 26 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய, தென்னை மர சின்னத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் வழக்கறிஞர் ஜெயராமன் வெறும் 11 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

10.50 AM: தூத்துக்குடி மாநகராட்சி 31,32,33 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி. 34- வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி, 35- வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி, 37 – சுயேச்சை வேட்பாளர் வெற்றி, 38- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றி.

10.35 AM: நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் நிலவரம்: (மொத்த வார்டுகள் 52)

1 வது வார்டு – தங்கராஜா, திமுக

2 வது வார்டு -செல்வகுமார் , காங்கிரஸ்.

3 வது வார்டு – அருள் சபிதா, காங்கிரஸ்.

4வது வார்டு – மகேஷ், திமுக.

5 வது வார்டு -உதயகுமார், மதிமுக.

6 வது வார்டு – அனுஷா பிரைட், காங்கிரஸ்.

7 வது வார்டு- மேரி ஜெனட் விஜிலா, திமுக

8 வது வார்டு – சேகர், அதிமுக

28 வது வார்டு – அனந்த லட்சுமி, திமுக

29 வது வார்டு – மீனா தேவ், பி.ஜே.பி.,

30- வது வார்டு – சந்தியா, காங்கிரஸ்

31 வது வார்டு – சோபி, திமுக

வெற்றி எண்ணிக்கை: திமுக + 10, அதிமுக-1, பாஜக., 1 சுயேச்சை-0

10.32 AM: கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில்’ முதல் சுற்றில் எண்ணப்பட்ட 14 வார்டுகளில் திமுக 10 இடங்களையும், சுயச்சை இரு இடங்களையும், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடங்களை கைப்பற்றியுள்ளது.

10. 30 AM: மதுரை மாநகராட்சியில் முடிவு அறிவிக்கப்பட்ட 21 வார்டுகளில் திமுக 11, சிபிஎம் 2, காங் 2 விசிக1, மதிமுக 1 அதிமுக 4 இடங்களில் வெற்றி.

10.25 AM: தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 1,3,4,5,6,7,8,9,11,12,13,15 – ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 10-வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றார். 14-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 2-வது வார்டில் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்.

10.20 AM: திருநெல்வேலி மாநகராட்சி 47-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் அபி அமீர் பாத்து வெற்றி. திருநெல்வேலி மாநகராட்சி 34-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்..

10.17 AM: நாகர்கோவில் மாநகராட்சி 5வது வார்டு மதிமுக வேட்பாளர் உதய குமார் வெற்றி பெற்றுள்ளார்.

10.15 AM: வேலூர் மாநகராட்சி: 37-வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். 10.10 AM: ஈரோடு மாநகராட்சியில் 6 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் பெற்றுள்ளார்.

10. 06 AM: கோவை மாநகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் கதிர்வேல்சாமி வெற்றி பெற்றார்.

10. 05 AM: சென்னை மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் 21 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

10.05 AM: ஈரோடு மாநகராட்சி 18 வது வார்டில் திமுக வேட்பாளர் காட்டு சுப்பு வெற்றி பெற்றார். 34-வது வார்டில் திமுக வேட்பாளர் ரேவதி திருநாவுக்கரசு வெற்றி பெற்றார். 43 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சாராமா ஜாபர் சாதிக் வெற்றி பெற்றார்.

10.00 AM: ஈரோடு மாநகராட்சி 10 வார்டில் திமுக கூட்டணிக் கட்சியான கொங்கு நாடு தேசிய கட்சி வேட்பாளர் குமரவேல் வெற்றி பெற்றார்.

9. 55 AM: தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டுகளில், முதல் சுற்றில் எண்ணப்பட்ட 12 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

9. 52 AM: சேலம் மாநகராட்சி 22வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே சி செல்வராஜ் வெற்றி. சேலம் மாநகராட்சி 53வது வார்டில் திமுக கூட்டணி வேட்பாளர் ஷாதாஜ் பக்ஷூ 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

9. 52 AM: நாகர்கோவில் மாநகராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் தங்கராஜா வெற்றி. இரண்டாவது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர்.செல்வகுமார் வெற்றி. 3 வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் அருள்சபிதா வெற்றி. 29 வது வார்டில் பாஜக வேட்பாளர் மீனாதேவ் வெற்றி. 28வது வார்டில் திமுக வேட்பாளர் அனந்த லட்சுமி வெற்றி.

9. 51 AM: கோவை மாநகராட்சியின் 7-வது வார்டில் காங் வேட்பாளர் வெற்றி. 76-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

9.50 AM: திருநெல்வேலி மாநகராட்சி 15-வது வார்டில் திமுக வேட்பாளர் அஜய் வெற்றி பெற்றார்.

9. 48 AM: சிவகாசி மாநகராட்சியில் முதல் 10 வார்டுகளில் 6 வார்டுகளில் அதிமுக வும் 4 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

9. 46 AM: தூத்துக்குடி மாநகராட்சி 12 வார்டில் திமுக வேட்பாளர் தெய்வேந்திரன் 815 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

9. 45 AM: தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சுப்புலெட்சுமி பொன்ராஜ் மொத்தம் 1166 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 769, அதிமுக வேட்பாளர் 306 வாக்குகள் பெற்றனர். 397 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் சுப்புலெட்சுமி வெற்றி பெற்றார்.

9. 44 AM: திருச்சி மாநகராட்சி 9-வது வார்டில் திமுகவின் நாகலட்சுமி அறிவுடைநம்பி (3062) வெற்றி பெற்றார்.

9.40 AM: மதுரை மாநகராட்சி 72வது வார்டில் அதிமுக வேட்பாளர் கருப்பசாமி வெற்றி பெற்றார்.
9. 35 AM: தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண் 12 இல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் 1211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

9. 34 AM: திருச்சி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 30-வது வார்டில் மதிமுகவின் ஜி.கதீஜா (3952), 39-வது வார்டில் காங்கிரஸின் எல்.ரெக்ஸ் (2482), 44-வது வார்டில் திமுகவின் பியூலா மாணிக்கம் (2824), 58-வது வார்டில் திமுகவின் கவிதா செல்வம் (2906) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ( அடைப்புக் குறிக்குள் உள்ளது வாக்கு எண்ணிக்கை)

9. 34 AM: தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண் 11ல் திமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் 1533 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

9. 33 AM: சேலம் மாநகராட்சியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தெய்வ லிங்கம் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9.31 AM: கோவை மாநகராட்சியின் 31-வது வார்டு மற்றும் 62-வது வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்..5-வது வார்டில் திமுக கூட்டணியில் உள்ள காங் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

9.30 AM: சேலம் மாநகராட்சி 37வது வார்டில் திமுக வேட்பாளர் திருஞானம் வெற்றி

9.20 AM: திருநெல்வேலி மாநகராட்சி 31-வது வார்டில் அதிமுக வேட்பாளர் அமுதா வெற்றி

9.15 AM: தூத்துக்குடி மாநகராட்சி நிலவரம்:

1-வது வார்டு – முதல் சுற்று

திமுக – 116

அதிமுக – 22

அமமுக – 221

சுயேச்சை – 289

2-வது வார்டு – முதல் சுற்று

திமுக – 213

அதிமுக – 87

அமமுக – 281

சுயேச்சை – 279

3-வது வார்டு – முதல் சுற்று

திமுக – 206

அதிமுக – 154

பாஜக – 41

சுயேச்சை – 157

தூத்துக்குடி மாநகராட்சி 12,13 மற்றும் 15வது வார்டு உள்ளிட்ட பல வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. 11 வது வார்டில் காங்கிரஸ் முன்னிலை வகிக்க14 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். 9.00 AM: தூத்துக்குடி மாநகராட்சி 1 வது வார்டில் குலையுடன் கூடிய தென்னை மர சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட கவிதா முன்னிலை வகிக்கிறார்.

8.45 AM: சென்னை, ஆவடி, .தாம்பரம்,.காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கோவை, திருப்பூர், ஈரோடு ,சேலம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர்,.மதுரை, .திண்டுக்கல், சிவகாசி, நெல்லை ,தூத்துக்குடி, நாகர்கோவில், ஒசூர் ஆகிய21 மாநகராட்சிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் திமுக 7 மாநகராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது.

8.30 AM: சேலம் மாநகராட்சியில் தாமதம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் ஓட்டு எண்ணிக்கை சேலம் சக்திகைலாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் துவங்கியது. இங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி ஒவ்வொருவராக உள்ளே செல்ல அனுமதித்தனர் . சேலம் மாநகராட்சி 60 வார்டுகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டதால் முகவர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் முகவர்கள் அலைபேசி, ஏர்-பட்ஸ், ப்ளூடூத் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

இதனால், போலீஸார் ஒவ்வொரு முகவரையும் தனிப்பட்ட முறையில் சோதனைக்கு உட்படுத்தி உள்ளே செல்ல அனுமதித்தால் , காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய ஓட்டு எண்ணும் பணி காலதாமதமாக 8 . 25 மணிக்கு துவங்கியது. மேலும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் உடனடியாக அனுப்ப வேண்டி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகவர்களை அனுப்புவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் சேலம் மாநகராட்சியில் ஓட்டு எண்ணும் பணி கால தாமதத்துடன் துவங்கியது.

8. 10 AM: மதுரையில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு: மதுரையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மூலம் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மங்கையர்கரசி கல்லூரி, பரவை, பாத்திமா காலேஜ் விளாங்குடி வக்பு போர்டு காலேஜ் கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )