BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில், காரைக்காலில், ஏனாமில் தலா ஒருவர் என மொத்தம் 3 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது 44 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் இதுவரை 1,65,742 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,63,736 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,32,023 பேரும், இரண்டாம் தவணை 6,50,854 பேரும் செலுத்தியுள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 12,602 பேர் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக 15,95,479 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், புதுச்சேரியில் மீண்டும் தலைதூக்க தொடங்கியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இனி கட்டாயம் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )