BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மடத்துக்குளம் பகுதியில் உள்ள பழனி பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களில் இன்று மின்மயமாக்கல் ஆய்வு பணி.

மடத்துக்குளம் பகுதியில் உள்ள பழனி பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களில் இன்று மின்மயமாக்கல் ஆய்வு பணி நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இன்று பழனி- பொள்ளாச்சி புதிய மின்சார ரயில் பாதையை, பெங்களூர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்ய உள்ளார்.

இதனையடுத்து இன்று 3 மணி முதல் 6 மணி வரை அதிவேக ரயில் சோதனை வேக ஓட்டம் நடத்த இருக்கிறார்.

எனவே மாலை 3 மணி முதல் 6 மணி வரை, ரயில் நிலையம் அருகே உள்ள பொதுமக்களும் மற்றும் குடியிருப்புவாசிகள், கால்நடை மேய்ப்போர், என அனைத்து தரப்பினரும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ரயில் பாதையை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் இதன் மூலம் அறிவிப்பு செய்கிறது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )