தலைப்பு செய்திகள்
மாணவர்களுக்கு இலவசம் அரசு அறிவிப்பு !

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே தற்போது போர் நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் தொடங்கிய இந்த போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதையடுத்து உக்ரைனில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தனர் போர் தொடங்கியதை அடுத்து ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் இந்திய மாணவ மாணவிகள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

உக்ரைனில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த மாணவர்கள் போர் காரணமாக தாயகம் திரும்பியதால் அவர்கள் படிப்பை தொடர இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது தற்போது இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது அதுவும் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
CATEGORIES Uncategorized
