BREAKING NEWS

திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்தார்

திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்தார்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ஓ எ இராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் துரை சண்முகபிரபு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட பேரவை துணை தலைவர் திருமாவளவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை திருக்கருகாவூர் அதிமுக கிளை கழக நிர்வாகிகள், கட்சியினர் செய்து இருந்தனர்.

CATEGORIES
TAGS