BREAKING NEWS

திருச்சி திருவரங்கத்தில் மின்சாரம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி திருவரங்கத்தில் மின்சாரம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி,

தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், மாதாமாதம் மின்கட்டணம் கணக்கிட வேண்டும், பால் விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் திருவரங்கம் தேவி தியேட்டர் அருகில் மாவட்ட தலைவர் பார்வதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், மாதாமாதம் மின்கட்டணம் கணக்கிட வேண்டும், பால் விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

 

இதில் மாவட்ட செயலாளர் அஞ்சுகம், பொருளாளர் ஆயிஷா, மணிகன்டம் ஒன்றிய செயலாளர் முத்துலெட்சுமி, நிர்மலா, சாந்தா, மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மு.செல்வராஜ், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், முத்தழகு, பொன்மலை பகுதி துணை செயலாளர் P.ராஜா,

 

இளைஞர் பெருமன்றம்மா.செயலாளர். செல்வகுமார், சந்தோஷ், ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சூர்யா, சி.பி.ஐ.மாவட்ட செயலாளர் சிவா. அன்சர் தின் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினார்கள். முடிவில் வை.புஸ்பம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டார்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )